மதுரையில் தடுப்பூசி முகாம் தீவிரம்

மதுரையில் தடுப்பூசி முகாம் தீவிரம்
X

மதுரை மடீட்சியாவில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி முகாம். 

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் 18வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுககு அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்புடன் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

மதுரையில் செனாய்நகர் இளங்கோ மேல்நிலைப்பள்ளி, மடீசியா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மற்றும் சில இடங்களில் காலை முதலே டோக்கன் கொடுத்து தடுப்பூசிகளை செலுத்தினர். பல இடங்களில் மக்கள் இருக்கையில் அமர்ந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.

மதுரை மடீட்சியாவில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்ட விகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, கோ. தளபதி எம்எல்ஏ, வெங்கடேசன் எம்பி, ஆட்சியர் அனீஸ் சேகர் மாநகராட்சி ஆணையர் விசாகன், மடீட்சியா தலைவர் வி.எஸ். மணிமாறன், வருவாய் அலுவலர் செந்தில் குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
application of ai in agriculture