ஆற்றில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரியதில் மோசடி: பொதுமக்கள் புகார்

ஆற்றில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரியதில் மோசடி: பொதுமக்கள் புகார்
X

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்

மதுரை சேடபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட ஏர்த்கொம்பர் நீர்வரத்து கால்வாயை தூர்வாரியதில் மோசடி நடந்தததாக கலெக்டரிடம் புகார்

ஆற்றில் நீர்வரத்து கால்வாயை தூர்வாரும் பணியில் மோசடி நடைபெற்றதாக பொதுமக்கள் .மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். கண்மாய் ஆக்கிரமிப்புகளால் 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாதிக்கப்படுவதாக வேதனை.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில், மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட எர்த்கொம்பர் நீர்வரத்து கால்வாயை பொதுப்பணித்துறையினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு செய்யப்படாத நிலையில், அதனை நம்பியுள்ள வண்டபுலி மற்றும் விட்டல் படவெட்டப்பட்டி,குடிப்பட்டி சில்வார்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பலமுறை பொதுப்பணித் துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வண்டபுலி பஞ்சாயத்தில் உள்ள கண்மாய்க்கு வரும் வரத்து நீரை, குடிசேரி கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தியதாகவும் பலமுறை புகார் அளித்தும் பொதுப்பணித்துறை கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக கோட்டாட்சியர் உத்தரவு அளித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் 20 ஆண்டுகள் பராமரிப்பில்லாத நீர்நிலைகளை தூர்வாரியதாக மோசடி நடைபெற்றுள்ளது.

பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால் வண்டபுலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக எர்த்கொம்பர் ஆற்றின் நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார கோரி விவசாயிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர் தூர்வாரப்படாத நீர்நிலைகளை, தூர்வாரியதாக் மோசடியில் ஈடுபட்டதாகவும், தங்களது பகுதியில் உள்ள நீர்நிலைகளை உடனடியாக தூர்வார வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story