லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மெயின் ரோட்டில் நில அளவையர் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு உசிலம்பட்டியை சேர்ந்த வினோதன் மனைவி காஞ்சனா நில் அளவையராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நக்களபட்டி ஊராட்சி பூச்சி பட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் பட்டா பெறுவது தொடர்பாக நிலத்தை அளந்து தருமாறு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் நிலத்தை அளக்க காஞ்சனா ரூ 4000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. ரஞ்சித்குமார் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் உத்தரவின் பேரில் ரசாயனம் கலந்த பணத்தை ரஞ்சித்குமாரிடம் வழங்கி நில அளவையர் காாஞ்சனாவிடம் அந்த பணத்தை கொடுக்க சொல்லியுள்ளனர்.
அப்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர், ரமேஷ் பிரபு தலைமையிலான போலீசார் காஞ்சனாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu