நெருங்கும் தேர்தல்: சூடு பிடிக்கும் மதுரை அரசியல் களம்

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொன்னுத்தாயி திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவினர் டிஜிட்டல் யுக்தியை பயன்படுத்தியும், வாக்குறுதிகளை கூறியும் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் திமுக வேட்ப்பாளர் பொன்னுத்தாய், தொகுதி மக்களுக்காக என்ன செய்ய போகிறார் என்பதை கூறாமல், தான் ஆட்டோக்காரரின் மனைவி என்று மட்டுமே கூறி வாக்கு சேகரித்து வருவதாக பரவலான கருத்துக்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், வேட்பாளராக உள்ள பொன்னுத்தாயி பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்து தனது ஏழ்மை நிலையை மட்டுமே கூறுவதாகவும், மற்றபடி அவருடன் செல்லும் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் மட்டுமே தொகுதி மக்களிடம் பேசி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். பொன்னுத்தாய்க்கு தொகுதியை பற்றி எதுவும் தெரியாததால், பேச மறுக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தொகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எம்.பியாக தேர்வாகி மக்களுக்கு எதுவும் நல்லது செய்யாத நிலையில், தற்போது வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு ஓட்டு கேட்டு வரும் வெங்கடேசன் மீது மதுரை மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu