/* */

மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா
X

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குன்னாரம்பட்டியில் பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள ராஜனேரி கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது. தற்போது கோடை காலம் துவங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

அதிகாலையில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசியதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சாதி, மத பேதமின்றி மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவர். இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Updated On: 13 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...