மதுரையில் பழுதான சாலையை சீரமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை

மதுரையில் பழுதான சாலையை சீரமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை
X
மதுரை பகுதி பழுதாக உள்ள நிலையில் உள்ள சாலை விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

சாலையில் பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சீரமைக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகரில் கடந்த ஒரு வாரகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் நீர் தேங்கி பல இடங்களில் மேடு பள்ளங்கள் ஆக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனிக்காமல் வாகனத்தை செலுத்தும் போது பள்ளமாக இருப்பதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் இன்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 -ஆவது வார்டு நேருநகர் நேதாஜி மெயின் ரோட்டில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தை தண்ணீர் தேங்கிய சாலையில் சென்றபோது பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் . இது போன்ற சம்பவங்களை தவிர்க்க மேலும் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமாவதுனது சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களை.


Tags

Next Story
application of ai in agriculture