/* */

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் அதிகமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் புகையிலை தடுப்பு சம்பந்தமாக கடைகளில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளி அருகே பெட்டி கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் வயது (43) என்பது இவர் நாகமலை புதுக்கோட்டையில் குடும்ப வறுமை காரணமாக தஞ்சம் புகுந்து பெட்டிக்கடை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜெயகணேஷிடம் இருந்த 21 கிலோ எடை கொண்ட குட்கா, பான் மசாலா 50 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Jan 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க