Begin typing your search above and press return to search.
மதுரை: வீடு புகுந்து தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு
மதுரையில், அதிகாலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, 13 சவரன் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
மதுரை டிவிஎஸ் நகர் முத்துப்பட்டி ஒய்.எம்.சி.ஏ .நகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரது மனைவி புவனா வயது 29. இவர் அதிகாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை செங்கல்லால் தாக்கினார். அவர் அணிந்திருந்த 13 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புவனா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.