எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்: அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்: காங்.எம்பி

எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்: அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம்: காங்.எம்பி
X

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்

அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் எய்ம்ஸ் மருத்துவமனை வரதாமதமானது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் நீடித்து வரும் தாமதத்துக்கு அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

அதிமுகவை பொறுத்தவரையில் ஜெயலலிதா கொள்ளை அடித்ததை விட முன்னாள், அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்தது அதிகம்.அதிமுக அரசு நிர்வாக சீர்கேடினால் எய்ம்ஸ் வர தாமதம் என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

.சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: எய்ம்ஸ் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியது தவறு. முந்தைய அதிமுக அரசு உட்கட்டமைப்பினை சீர் செய்யாத காரணத்தால் இன்று எய்ம்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பற்ற விதத்தில் கோரிக்கை வைப்பது நியாயமற்றது. Zomato நிறுவன ஊழியர் ஹிந்தி தேசிய மொழி என்று பேசிய நிகழ்வு ஹிந்தி மொழி ஆதிக்கம் உள்ளவர்களின் ஆதிக்க சக்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. மோடி அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பிறகுதான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மொழியை அழிப்பதில் அவர்கள் குறியாக உள்ளார்கள்.இதன் வெளிப்பாடாக ஹிந்தி தெரிந்தவர்கள் அவர்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பொய் வழக்கு போட்டு அதிமுகவை முடக்க நினைக்கின்றனர் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூறியது வேடிக்கையானது.. 2011இல் அமைச்சராக பொறுப்பேற்ற விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 2021ல் எவ்வளவு? 10 வருடத்தில் 55 கோடி ரூபாய்க்கு வெள்ளைப்பணத்தில் சொத்துகள் வாங்கியது எப்படி. ஆகவே, இது பொய் வழக்கு என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுகவினரை பொறுத்தவரையில், ஜெயலலிதா கொள்ளை அடித்ததை விட, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்தது அதிகம். தமிழகத்தை சூறையாடி 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டு சென்றுள்ளார்கள்.இவர்களது சொத்து மதிப்புகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது . தமிழக முதல்வரின் இந்த தைரியமான முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.


Tags

Next Story
application of ai in agriculture