/* */

கொரோனா தடுப்பில் அனைத்து கட்சி கருத்தை கேட்டு தீவிர பணி: அமைச்சர் மூர்த்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாளை அனைத்து தரப்பு கருத்தையும் கேட்டு அதனை செயல்படுத்த உள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பில் அனைத்து கட்சி கருத்தை கேட்டு தீவிர பணி: அமைச்சர் மூர்த்தி
X

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தபோது.

மதுரை விமான நிலையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனவை தடுப்பதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதே நேரத்தில் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவில் நாளை நானும் நம்முடைய நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் அதைப்போல மாணிக்கம் தாகூர் உசிலம்பட்டி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்தரநாத், போல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் பாகுபாடில்லாமல் கொரேனா தடுப்பு நடவடிக்ககையில் ஈடுபட உள்ளோம்.

மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து போர்க்கால அடிப்படையில் கொரோனாவை கட்டுபடுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்ல மேலூராக இருந்தாலும், திருமங்கலமாக இருந்தாலும் அத்தனை அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அந்த படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு இன்றைக்கு தனியார் மருத்துவமனைகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பு ஊசி 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்பதற்காக இங்கு அழைத்து இருக்கிறோம். அதன்படி வெகுவேகமாக இந்த பணியில் ஈடுபட்ட உள்ளோம் என அமைச்சர் மூர்த்தி கூறினார்,

Updated On: 12 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!