/* */

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
X
கைது செய்யப்பட்ட 4 பேர்.

மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்னர்.

அப்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த தெய்வம், ஜெயக்குமார், ரமேஷ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 340கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 March 2022 9:26 AM GMT

Related News