திருப்பரங்குன்றம்: சென்டிமென்ட் ஜெயிக்குமா?

திருப்பரங்குன்றம்: சென்டிமென்ட்  ஜெயிக்குமா?
X
சென்டிமென்ட் காட்சி ஓகே ஆனால் அது மட்டும் போதுமா? ... மக்களை எரிச்சலடைய செய்த வேட்பாளர்!

திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தற்போது இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார்.

இது இவரது சொந்தத் தொகுதி என்பதால் கடந்தமுறை வெற்றிபெற்ற மதுரை வடக்கு தொகுதியிலிருந்து இந்தத் தொகுதிக்கு மாறியுள்ளார். திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொன்னுத்தாயி திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களில் வாக்காளர்களைக் கவர சுவர் விளம்பரமும், சுவரொட்டிகளும் முக்கிய பங்கு வகித்தன. தற்போது டிஜிட்டல் தளம் கோலோச்சியுள்ளது.

அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, தினமும் அந்த தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் செல்போனில் பேசி ஆதரவு திரட்டுகிறார். தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இந்த பிரச்சார உத்தி, இளம் வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

இப்படி வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தை பயன்படுத்தியும், தங்களது வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தும் அதிமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஆனால் திமுக வேட்பாளர் பொன்னுத்தாயோ , உடைந்து போன பழைய டேப் ரெக்கார்ட்டரை போல அனுதாப அலையை, ஓட்டாய் மாற்ற முயற்சித்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் தான் ஒரு ஆட்டோ டிரைவர் மனைவி என்றும், ஏழ்மை நிலையில் இருந்து வருவதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்களுக்கான தேவைகள் என்னென்ன என்பதை அறியாமல், தன்னுடைய அனுதாபத்தை மட்டும் வைத்து கொண்டு, அதனை ஓட்டாய் மாற்ற முயற்சித்து வரும் பொன்னுத்தாயின் பிராச்சரம் மக்களிடையே மட்டும் இல்லாமல், திமுகவினரையும் சலிப்படையை செய்துள்ளது.

நேரடியாக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்ற நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மக்களிடையே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் வரலாற்று உண்மை என்று கூறுகின்றனர்.

Next Story