Begin typing your search above and press return to search.
மதுரையில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரையில் திடீர் மழை பெய்து குளிர்ச்சியடைய வைத்துள்ளது.
HIGHLIGHTS
வெப்ப சலனம் காரணமாக மதுரை மாநகரில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மதுரை நகர் பகுதியான பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம், பொன்மேனி, காளவாசல், பைபாஸ் சாலை , மாடக்குளம், பெரியார் பேருந்து நிலையம், பசுமலை, ஆண்டாள்புரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், மதுரையில் தற்போது குளுமையான சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயில் வாட்டி வந்த வேளையில் இந்த மழை பெய்து மதுரையை குளிர்ச்சியடைய வைத்துள்ளது.