/* */

கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து ரவுடி எஸ்கேப்

மதுரையில், கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து ரவுடி எஸ்கேப்
X

மதுரை, மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். அவரது மகன் மீனாட்சி சுந்தரம் (23). இவர் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வைகை வடகரையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசல் அருகே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது.

எனினும், இரண்டு பேர், போலீசாரிடம் வசமாக சிக்கினர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர், மீனாட்சிசுந்தரம்; மற்றொருவர் புளியந்தோப்பு வழுக்கை கார்த்திக் (24) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மீனாட்சி சுந்தரத்திற்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், போலீசார் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு 7 மணி அளவில் போலீசாரின் காவலையும் மீறி ரவுடி மீனாட்சிசுந்தரம் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடிய ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 27 April 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு