மதுரையில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை

மதுரையில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு   கொரோனா வார்டில் சிகிச்சை
X

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் மதுரைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனாவின் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி