மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
X
காஜிமார் தெருவில் வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இன்று மதுரையில் என்.ஐ.ஏ. திடீர் சோதனையில் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகிறது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் வசிக்கும் முஹம்மது தாஜுத்தீன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலையிலேயே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முகமது தாஜுதீன் இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுடன் இவர் தொடர்பில் இருந்தாரா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டனர். முஹம்மது தாஜுத்தீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது தாஜுத்தீன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது தாஜுதீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் காவல்துறை மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் இவருக்கு தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. மதுரை மாநகர போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் உள்ளார்கள்.

Tags

Next Story