/* */

லஞ்சம் வாங்க மாட்டேன்: காவல் நிலையத்தில் விளம்பர பதாகை ஒட்டிய ஆய்வாளர்

லஞ்சம் வாங்க மாட்டேன் என மதுரையில் காவல் ஆய்வாளர் காவல் நிலையம் முன்பு ஒட்டியுள்ள அறிவிப்பு பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது

HIGHLIGHTS

லஞ்சம் வாங்க மாட்டேன்: காவல் நிலையத்தில் விளம்பர பதாகை ஒட்டிய ஆய்வாளர்
X

ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் வைத்துள்ள பதாகை 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் காவல் நிலைய வளாகம் முன்பு ஒட்டி உள்ள அறிவிப்பு பலகை தற்போது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது .

அந்த அறிவிப்பில், ஒத்தக்கடை காவல் நிலைய பொறுப்பு அதிகாரியும், நிலைய ஆய்வாளருமான சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சப் பணமும், பொருளும் பெருவதில்லை. என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரை சுமுகமாக முடிப்பதாக கூறி யாரிடமும் பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம், கொடுக்கும் பட்சத்தில் நான்பொறுப்பு ஏற்க மாட்டேன் . காவல்துறை உங்கள் நண்பன் என அதிரடியாக காவல் நிலையம் முன்பு அறிவிப்புப் பலகை ஓட்டியுள்ளார்.

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் மத்தியில் ஆய்வாளர் சரவணனின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பேசும் பொருள் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய நேர்மையை பாராட்டி மதுரை மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இவ்விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மதுரை மாவட்ட மக்களும் தமிழகமெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இவருடைய பணியை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது