சுற்றுலா சென்றதை முகநூலில் பதிவிட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

சுற்றுலா சென்றதை முகநூலில் பதிவிட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு
X

பைல் படம்

சிறுமலையில் துப்பாக்கிப் பயிற்சி என்று முகநூலில் பதிவிட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது

மதுரை சுற்றுலா சென்றதை முகநூலில் பதிவிட்டவர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த மதிவாணன் (67). இவர் தனது குடும்பத்தாருடன் சிறுமலை சுற்றுலா சென்று திரும்பியுள்ளார் . அங்கு எடுத்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டு சிறுமலையில் துப்பாக்கி பயிற்சி என்று தலைப்பிட்டுள்ளார் . இதுகுறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் மதிவாணன் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மதிவாணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் சிறுமலை சுற்றுலா சென்றது குறித்து முகநூலில் பதிவிட்டேன். அதற்கு விளையாட்டாக சிறுமலையில் துப்பாக்கி பயிற்சி என தலைப்பிட்டு இதற்காக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி மனுதாரர் விளையாட்டாகச் செய்ததை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொண்டனர்.மனுதாரர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் .அங்கு அவர் எடுத்த புகைப் படங்களில் எந்த ஆயுதமும் இல்லை ,அதில் மனுதாரர் குற்றம் செய்யும் நோக்கில் எதையும் செய்ததாக தெரியவில்லை .எனவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

Next Story