சத்திரப்பட்டி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

மதுரை காஞ்சாராம்பேட்டைபகுதியை சேர்ந்தவர் நிதிமாறன் வயது (52) சத்திரப்பட்டி அரசு டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்று, மீண்டும் நேற்று காலை கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதனை இதனை கண்டு மேலாளர் நிதி மாறன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, 110 மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன கடையின் சிசிடிவி கேமராவில் சேதப்படுத்த பெற்றிருந்தது. கடையில் ரூ.28ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் திருடு போனது. இதுபற்றி, சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபானங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu