மதுரையில் கிடாய் முட்டு போட்டி: ஏராளமானோர் பங்கேற்பு

மதுரை அருகே பொட்டபாளையம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு 1கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.
மதுரை அருகே அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா. 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிடா முட்டு போட்டி.
மதுரை அருகே பொட்டபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு 13 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான முட்டுக்கிடாய் போட்டியானது இன்று அரசு அனுமதியுடன் வெகு விமர்சையாக மதுரை மாவட்டம் அருகே அமைந்துள்ள பொட்டபாளையம் கிராமத்தில அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் இளைஞர்களால் இப் போட்டி நடத்தப்பட்டது.
மதுரை பனையூர் அருகே உள்ள பொட்டாபாலையம கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன் கோவில் பங்குனித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 13 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக கோவில் புதிபிக்கபக்கப்பட்டு ஐந்தாவது மகா கும்பாபிஷேகம் நேற்று கிராம பெரியவர்களால் கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க வெகு சிறப்பாக நடத்தினர்.
இதனை தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான கிராம பொதுமக்கள் அப்பகுதி இளைஞர்கள் முதல் முறையாக 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட கிடா முட்டு சண்டை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி காவல் துறையினரின் அனுமதி பெற்று பார்வையாளர்களும், உரிமையாளர்களுக்கும் முக கவசம் வழங்கப்பட்டு இப்போட்டி நடைபெற்றது. முட்டு கிடாய் போட்டியில் பங்கேற்ற கிடாய் களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் பதியப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு போட்டியில் பங்குபெறும் முட்டுக்கட்டைகளை வயது, பற்களின் எண்ணிக்கை, காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து பின்னர் முட்டு கிடாய்கள் உடன் ஜோடி போடப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியானது காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், காவல்துறையினர் தலைமையில் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் 120 கிடாய்கள பங்குபெற்றது. இந்த போட்டியில் 60 ஜோடிகளாக பந்தயம் மணிக்கு பத்து ஜோடிகள் வீதம் ஆறு சுற்றுகளாக நடைபெற்றது. போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற கிடாக்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள், பொருட்கள் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் சார்பில் குத்துவிளக்கு, பொங்கல் பானை, கட்டில், பீரோ உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் இப்போட்டி நடப்பதால் அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu