மதுரை அருகே தூண்டில் மீன் பிடித் திருவிழா: ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஓட்டக்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த தூண்டில் மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம், மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூண்டில்களைப் போட்டு மீன் பிடித்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஓட்டக்கோவில்பட்டி கிராமத்திலுள்ள குளத்தில் தூண்டில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன் பிடித்து கொண்டாடினர் .
இத்திருவிழா பழைமை முறைப்படி தூண்டில்களை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று நாட்டு வகை மீன்களான கெண்டை மீன், கெளுத்தி மீன், கட்லா மீன், கடல் கெண்டை, கொறவை மீன், கெண்டை மீன் வகைகள் பிடித்துச்சென்றனர். இதில் அதிகமான மீன்களைப் பிடித்த இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிராமத்தினர் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். திருவிழாவானது பண்டைகால முறைப்படி வருடம் தோறும் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu