/* */

பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு: ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கை ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு: ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி உத்தரவு
X

பைல் படம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கழிப்பறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கை பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கடந்த 2019ஆம் ஆண்டு உண்டியல் எண்ணும் பணி நடந்தது அப்போது பெண் ஊழியர்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்ததாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர் . அதன் பின்னர் பச்சையப்பன் இவ்வழக்கில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கின் விசாரணை பேரையூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பெண் ஊழியர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: பெண்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா வைத்து படம் பிடித்தது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் புகார்தாரர் இடம் வாக்குமூலம் பெறவில்லை. குற்றப் பத்திரிக்கையில் பல உண்மைகள் இல்லை. எனவே இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது . மனுவை விசாரித்த நீதிபதி பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி இந்த வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Updated On: 28 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...