/* */

போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்

போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது - மதுரை ஐகோர்ட்
X

போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது என உயர்நதிமன்றம் உத்தரவு.

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளராக பணி புரிந்தவர் அபிமன்யு. இவர் திருச்சிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்ட இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி அபிமன்யு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார் .

அந்த மனுவில் போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறேன் . தொழிற்சங்கத்தினரின் தூண்டுதலின் பெயரில் இடம் மாறுதல் செய்துள்ளனர். இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் மதுரையிலிருந்து திருச்சிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மதுரையில் இருந்து வெகு தொலைவில் இல்லை ஓய்வு பெறும் நேரத்தில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன மனுதாரர் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள் நிறைய உள்ளன. எப்படி இருந்தாலும் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும்.

தொழிற்சங்கத்தினர் தூண்டுதலால் தன்னை இடமாறுதல் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தினர் மீது மனுதாரர் சட்டப்படி புகார் அளிக்கலாம். போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. இது போன்ற விஷயங்களில் முடிவெடுப்பதில் அதிகாரிகள் தான் சிறந்தவர்கள் .

நீதிமன்றங்கள் தேவையில்லாமல் தலையிடுவது நிர்வாகத்தின் சட்ட சிக்கலை ஏற்படுத்தும். மனுதாரர் உடன் மேலும் இரு உதவி மேலாளர்கள் இடமறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மனுதாரர் இடமாறுதல் தலையிட வேண்டியதில்லை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

Updated On: 16 March 2022 2:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது