/* */

விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்

லஞ்சம் கொடுப்பவர்களுக்கே இலவச மின் இணைப்பு கொடுப்பதாக மேலூர் மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

HIGHLIGHTS

விவசாய மின் இணைப்பு பெற லஞ்சம்: விவசாயிகள் குமுறல்
X

மேலூர் தாலுகாவில் விவசாயத்திற்கு 5 எச்.பி., திறனுள்ள இலவச மின்சாரத்திற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பத்துள்ளனர். மின் இணைப்புக்கு மனுசெய்து 17 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு வழங்காமல் அதன் பிறகு மனு கொடுத்தவர்களுக்கு வழங்க, மின் கம்பங்களை ஊன்றி வருகின்றனர்.

எட்டிமங்கலம் விவசாயி சுப்பையா கூறுகையில், 2004 ம் ஆண்டு ஆழ்குழாய் அமைத்து தேவையான ஆவணங்களை மின்வாரிய அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். 2021ல் மின் இணைப்பு தர உள்ளதால் தயார் நிலையில் இருக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பதிவு தபால் வந்தது. ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.

அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது அலுவலகம் எதிரே உள்ள கணினி மையத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் இணைப்பு கொடுக்கப்படும் என்கின்றனர்.

எனவே, துறை சார்ந்த உயரதிகாரிகள் ஆய்வு செய்து வரிசைப்படி மின் இணைப்பு வழங்கவேண்டும். லஞ்ச ஒழிப்பு துறையினரும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

மின் உதவி பொறியாளர் நாகதிருத்தணி கூறுகையில், விவசாயிகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மின் இணைப்பு குறித்து என்னை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Updated On: 27 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...