Begin typing your search above and press return to search.
மதுரை மாவட்டம் மேலூர் சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவலர் சந்திர சுபாஷ் பணிக்கு சென்ற போது மேலூர் 4 வழிச்சாலையில் லாரி மோதி உயிரிழந்தார்
HIGHLIGHTS
மதுரை மேலூரில் நேரிட்ட சாலை விபத்தில் நெல்லை மாவட்டம் தளவாய் படத்தை சேர்ந்த காவலர் உயிரிழப்பு.
நெல்லை மாவட்டம், தளவாய் புரத்தை சேர்ந்தவர் சந்திரசுபாஷ். இவர் திருச்சி ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊர் சென்று இன்று திரும்பி பணிக்கு திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது மேலூர் 4 வழிச்சாலையில் மூட்டை ஏற்றி வந்த கனரக லாரி, காவலர் சந்திர சுபாஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காவலர் சந்திரசுபாஷ் மதுரை அரசு இராசாசி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேலூர் போலீஸார், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.