மதுரை அருள்மிகு அழகர்கோயிலில் நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது
அழகர்கோவில் மற்றும் கள்ளழகர்(பைல்படம்)
அருள்மிகு அழகர் கோவில் திருக்கல்யாண வைபவம் மார்ச் 15ஆம் தேதி தொடங்குகிறது .
மதுரை மாவட்டம் அருள்மிகு அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றாகத்திகழ்கிறது கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் .
திருக்கல்யாண உற்சவம் தனிச் சிறப்புடையது.ஆகும்.இந்த விழாவானது வருகிற 15-ஆம் தேதி காலையில் கோவிலில் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் அருள்மிகு கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூமி தேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி வலம்வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார் . பின்னர் சுவாமி இருப்பிடம் போய் சேர்வார் தொடர்ந்து 16ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாலாம் திருநாள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இதில் அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குல் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி கல்யாண சுந்தரவல்லி தாயார் ஆண்டாளை மணக்கிறார் . திருக்கல்யாண வைபவம் நடந்து முடிந்ததும் விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடைபெறும்.மேலும் 19ஆம் தேதி ஐந்தாம் திருநாள் அன்று காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு தேவர்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பின்னர் மாலையில் மஞ்சள் நீர் சாற்றுமுறை நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் , துணை ஆணையர் தி.அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் திருக்கல்யாண வைபவம் திருவிழாவில் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu