மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கார் அடித்து உடைப்பு

மக்கள் நீதி மய்ய  வேட்பாளர்   கார் அடித்து உடைப்பு
X
மக்கள் நீதி மையம் பிரசாரத்தின் போது திமுகவினர் வேட்பாளரின் காரை அடித்து நொறுக்கி வெறியாட்டம்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் முனியசாமி நேற்று மாலை துவரிமான் பகுதியில் வாக்காளர்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத, திமுகவினர் அவரது காரை மறித்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து வேட்பாளர் முனியசாமி கூறியதாவது, எனது வாகனம் சிலரை கடந்து சென்ற நிலையில் எனக்கு பின்னால் வந்த மக்கள் நீதி மய்ய தொண்டர்களின் காரை மறித்து அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் காரில் அமர்ந்திருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். காரில் இறங்கிய இளைஞர்களை திமுகவினர் அடித்துள்ளனர். நாங்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். தற்போது காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர்களுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் விளாங்குடி பகுதியில் தாக்க முயன்றனர். இச்சம்பவங்கள் திமுக வேட்பாளர் சின்னம்மா தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறதா என எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம். தமிழகத்தில் இரண்டு கழகங்களும் ஒழிந்தால்தான் அமைதியான தமிழகம் உருவாகும் என்றார்.

Tags

Next Story