உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீரா உடல் - மதுரையில் தகனம்.

கொரோனா இரண்டாம் அலையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களில் முக்கிய பாத்திரமாக நடித்த நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.
மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் ரிதிஷ் வீரா. இவர் சென்னையில் தங்கி சினிமா பணிகளை செய்து வந்தார். உயிரிழந்த நிதிஷ் வீரா உடலை அவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து பட்டிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.நடிகர் நிதிஷ் வீராவுக்கு நந்தினி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu