/* */

கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - நோயாளிகள் அவதி.

உறவினர்கள் வேதனை - மருத்துவர்கள் ஆறுதல்.

HIGHLIGHTS

கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - நோயாளிகள் அவதி.
X

மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

மதுரை அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் 1400நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய 400படுக்கைகளிலும் நிரம்பிய நிலையில் 120பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஆக்சிஜன் நிரப்பிகள் முழுவதுமாக தீர்ந்து போனது.

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனிடையே போதிய ஆக்சிஜன் இல்லாத நிலையில் 3பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக தற்காலிகமாக சிறிய அளவிலான சிலிண்டர்கள் மூலமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது.

நேற்றிரவே ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய நிலையில் தொடர்ந்து முறையாக கண்காணிப்பு இல்லாத சூழலில் இன்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. தொடர்ந்து திருச்சியிலிருந்து ஆக்சிஜன் டேங்கர் மூலம் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் காணப்பட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் அவர்களுக்கு. மன தைரியத்துடன் இருக்க ஆறுதல் கூறினர்.



Updated On: 17 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!