/* */

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் செயின் பறிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு   வந்த பெண்களிடம்  செயின் பறிப்பு
X

மதுரை தெற்கு வாசல் காவல் நிலையம்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்று திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாத்தூர் பூண்டிவிளக்கு பகுதியை சேர்ந்த இந்திரா (59) பங்கேற்றார். இவரிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி விட்டனர். இதேபோல மதுரை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், கம்பர் தெருவை சேர்ந்த அமுதா (62)என்பவரிடமிருந்தும் 3 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இந்திராவும்,அமுதாவும் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து இருவரிடமும் செயின் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 25 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...