/* */

மதுரை உயர்நீதிமன்ற வழக்கு: கன்னியாகுமரி ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவு.

HIGHLIGHTS

மதுரை உயர்நீதிமன்ற வழக்கு: கன்னியாகுமரி ஆட்சியர் பதில் தர உத்தரவு
X

குமரி மாவட்டத்தை சேர்ந்த மரியா அல்பி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் எனது கணவர் ராபர்ட் சேவியர் ராஜ் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்தார். நைஜீரியா கடல் பகுதியில் இருந்த போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எனது கணவரின் உடல் மீட்கப்படவில்லை . எனது கணவரை இறந்ததாக நைஜீரியா காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் இறப்பு சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை.

கணவர் இறப்பு சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எனது கணவர் இறப்பு சான்றிதழை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நைஜீரிய காவல்துறையினரின் அடிப்படையில் மனுதாரர் கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க என்ன தடை உள்ளது? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Updated On: 16 April 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது