/* */

கொரோனா தடுப்பூசி மையத்தில் கேள்விகுறியான சமூக இடைவெளி

கொரோனா தடுப்பூசி மையத்தில் கேள்விகுறியான சமூக இடைவெளி
X

மதுரையில் கொரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஷெனாய்நகர் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மையமாக செயல்பட தொடங்கிய நிலையில் இன்று காலை முதல் அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.300க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்ததால் ஒரே நேரத்தில் குவிந்தனர். மேலும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் முறைகேடுகள் நடைபெறாமல் உரியமுறையில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு நாளுக்கு நாள் அறிவுறுத்தி வரும் நிலையில் அரசு சார்பில் நடத்தப்படகூடிய கொரோனா தடுப்பூசி மையத்திலேயே போதிய சமூக இடைவெளி கடைபிடிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!