/* */

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்
X

மதுரை சைல்டு லைன் 10 98 அமைப்பு மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பாக குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் இன்று குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் இரத்தினவேலு தெரிவித்தார் .

மதுரை சைல்டு லைன் 10 98 அமைப்பு மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பாக, குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், அரசு இராஜாஜி மருத்துவமனை முதலவர் இரத்தினவேலு பேசியதாவது: தற்போது நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக அரசு பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைவரும் குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் . மதுரை மாவட்டத்தை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்ற வேண்டும் என்றார். இதில் மதுரை மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் சார்லஸ் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் சைல்டு லைன் பற்றிய திட்ட அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தனலட்சுமி சட்டத்தைப் பற்றியும் மருத்துவகளுடைய பங்களிப்பு பற்றியும் கருத்துகளை விவரித்தார் .மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன் குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் பால சங்கர் ,மகப்பேறு மருத்துவ துறை தலைவர் சுமதி .மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் நிஷாந்த் சக்தி விடியல் இயக்குனர் விஜய் ஜேசுதாஸ் சைல்டு லைன் 10 98 அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  5. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  6. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  7. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  9. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது