/* */

மதுரை பாக்கியநாதன்புரம் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

மதுரை பாக்கியநாதன்புரம் பகுதியில் பெண்கள் சாலையில் நாற்று நட்டு, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மதுரை பாக்கியநாதன்புரம் சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
X

மதுரை பாக்கியநாதன்புரம் பகுதியில் பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

மதுரை மாநகர் பகுதியான கேகே நகர், அண்ணாநகர், பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், வசந்த நகர் ,பெரியார் நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று துவங்கிய கனமழை தொடர்ந்து 4 மணி நேரமாக பெய்தது இந்நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகள் குண்டும் குழியுமாக சகதியும் தேங்கி நின்றது. இந்நிலையில் பாக்யநாதபுரம் களத்துபொட்டல் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற மதுரை மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் , பொதுமக்கள் நாற்று மற்றும் செடிகளை கொண்டு குண்டும் குழியுமான சாலைகளில் நடவு செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும், நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 27 Nov 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு