சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நவம்பர் 16க்கு ஒத்திவைப்பு

கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் தந்தை, அவர் மகனான ஜெயராஜ், 2020 ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் 9 பேரும் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கில் சாட்சியாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை பணியாளர் நடராஜன் என்பவர், நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்.
அப்போது, தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, இருவரின் உடலிலும் காயங்கள் தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும் சாட்சியமளித்தார் .வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அன்றைய தினம், மற்றொரு சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தந்தை மகன் இருவரும் ஊசி செலுத்திய செவிலியரிடம், சாட்சியாக விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்குராஜா, ஜெயராஜ் நண்பர்கள் உள்ளிட்டோர் இடமும் சாட்சியம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu