பணம் வசூலிப்பது மட்டுமே இ- சேவை மையம் குறிக்கோள் என மக்கள் குற்றசாட்டு

கிராமப்புறங்களில் செயல்படும் இ-சேவை மையம் கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்காக என உரிமம் பெற்று நகர்ப்புறங்களில் கல்லா கட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற மேம்பாட்டிற்காக கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மாநில அரசின் சிஎஸ சி என்னும் பொது சேவை மையம் தனியார் கம்யூட்டர் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது .
இதன் நோக்கம் அரசின் சேவைகள் கிராமப்புற மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது. இதை கண்கணிக்க மாவட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளார் உள்ளனர்.இதை மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் தனியார் சி எஸ் சி தனியார் கம்பியூட்டர் சென்டர்களுக்கு மாநில அரசின் இ-சேவை ஐ டி வழங்கப்படுகிறது. அவர்கள் அதே கிராமத்தில் தொடர்ந்து இ-சேவை மையத்தின் மூலமாக வருமான சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று (வகுப்பு சான்று) போன்ற ஒவ்வொரு சான்றுக்கு ரூபாய் 60 வீதம் மக்களிடம் கட்டணம் பெற்று சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஆனால் இவர்கள் இந்த இ-சேவை ஐ டி கிடைக்க பெற்றதும், அரசின் விதிமுறைகளை மீறி பலரும், நகர்புறங்களில் இந்த மையத்தை நடத்தி வருகிறார்கள். இதில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவை வழங்குவதற்கு அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு கல்லா கட்டுவதாகவும் புகாரும் எழுந்துள்ளது. மேலே குறிப்பிட்ட சேவைகளுக்கு ரூ. 120,150 என வசூல் செய்கிறார்கள். உரிமம் பெற்ற பகுதிகள்தான் இவர்கள் இ- சேவை மையம் நடத்துகிறார்களா என மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு, இ-சேவை மையத்தை அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட கிராமப்புறத்தில் தொடர்ந்து இயக்குவதை கண்காணிக்க மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu