ரயில் பாதையில் நிலச்சரிவு: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பைல் படம்
ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 21 அன்று இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 16 128 மற்றும் நவம்பர் 22 அன்று காலை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 16 127 ஆகியவை, திருநெல்வேலி குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 21 அன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 16 723 மற்றும் நவம்பர் 22 அன்று மாலை கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 16 724 ஆகியவை, நாகர்கோவில் கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக செய்யப்படுகிறது.
நவம்பர் 22 அன்று காலை திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 22 627 மற்றும் நவம்பர் 22 அன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 22 628 ஆகியவை, திருநெல்வேலி திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது . நவம்பர் 21 அன்று இரவு மதுரையிலிரந்து புறப்பட வேண்டிய மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் 16 729 திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இருந்த ரயில் 16 730 திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu