Begin typing your search above and press return to search.
மாணவர்களோடு மாணவராக அமர்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆய்வு செய்தார் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
HIGHLIGHTS
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். செல்லும் இடங்களில் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தும் அவர் ஆசிரியர்கள் மட்டும் இன்றி மாணவர்களையும் சந்தித்து அவர்களது குறை, நிறைகளை கேட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சி.புளியங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்த மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களோடு மாணவராக அமர்ந்து அமைச்சரே ஆய்வு நடத்தியது அந்த பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.