/* */

மதுரையில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்தது.

HIGHLIGHTS

மதுரையில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு
X

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மதுரை, தேனி மாவட்டங்களிலிருந்து மல்லிகை, முல்லை, பிச்சி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்கள் வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பகுதியிலிருந்து ரோஜா உள்ளிட்ட மலா்கள் கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விவசாயிகளிடம் மலா்களை கொள்முதல் செய்யும் வணிகா்கள் மொத்த வியாபாரம் செய்கின்றனா். சந்தையின் வெளிப் பகுதியில் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. இச்சந்தையில் இருந்து விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட விற்பனையாளா்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், பூக்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த சில நாட்களாகவே மல்லிகைப்பூ விலை அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரை மல்லிகைப்பூ கிலோ ரூ.500 ஆக விற்பனையான நிலையில், இன்று சந்தையில் கிலோ ரூ.1,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 14 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!