/* */

வைகையில் மூன்றாம் கட்ட வெள்ளம் எச்சரிக்கை விடப்பட்டது

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வைகையில்  மூன்றாம் கட்ட வெள்ளம் எச்சரிக்கை விடப்பட்டது
X

வைகை அணை 

தற்பொழுது பெய்து வரும் தென்மேற்கு வடகிழக்கு பருவ மழையால் வைகை அணைக்கு பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, தேனி முல்லை ஆறு, வருஷநாடு வைகை ஆறு மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக உள்ளது.

அணையின் மொத்த உயரம் 71 அடியில் இம்மாத தொடக்கத்தில் 62 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 9 மணிக்கு 65 அடியை எட்டியது. இதனால் அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று இரவு நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2789 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தேனி மதுரை மாவட்ட குடிநீருக்கு வினாடிக்கு 60 கன அடி வெளியேற்றப்படுகிறது அணையில் இருந்து வினாடிக்கு 7 மதகுகள் மூலம் ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றின் வழியே வெளியேற்றப்படுகிறது.

எனவே, வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Updated On: 10 Nov 2021 2:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா