கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டு

கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்களுக்கு  பாராட்டு
X

மதுரையிலே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண்குழந்தை பிறந்தது

மதுரை மாவட்டம் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு பொதுமக்கள் பாராட்டுத்தெரிவித்தனர்.

மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த வேலு பாண்டியன் மனைவி சரண்யா( 25 )நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராஜாக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் வழியில் பிரசவ வலி அதிகரித்ததால், ஆவின் பால்பண்ணை அருகே ஓட்டுநர் இருளாண்டி ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நிறுத்தினார். இதனையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் சரண்யாவிற்கு பிரசவம் பார்த்தார்.

இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.தாயும் சேயும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இக்கட்டான சூழலை சமாளித்து தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்ன கருப்பனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

அரசு சுகாதார நிலையம் ராஜாக்கூர் மருத்துவமனை மருத்துவர் செவிலியர்களும் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். 108 ஊர்தியின் உதவியாளர் பிரசவம் பார்த்த முயற்சி கூட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் சாதரண நோயாளிக்களுக்கு கூட சிகிச்சை அளிக்காமல் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

.

Tags

Next Story