/* */

இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய பாலம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்

மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிர்சேதம் ஏற்படுத்திய ஜெ.எம்.சி ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி அபராதம்

HIGHLIGHTS

இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்திய பாலம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்
X

பைல் படம்

மதுரையில் நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ஆகாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் பிரமாண்ட பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இந்த பயங்கர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை மேம்பாலம் விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்பித்தனர். அதன்படி விபத்துக்கு காரணமான ஜே.எம்.சி. ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!