மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜவினர் மாலை அணிவித்து மரியாதை

Goripalayam Thevar Silai-மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார். அவருடன் சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu