மதுரை மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

மதுரை மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
X
மதுரை போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் வருகிற 29-ஆம் தேதி திங்கட்கிழமை மதுரை எஸ்பி அலுவலகத்தில் நடைபெற உள்ளது

மதுரை மாவட்ட போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு பொது ஏலம் வருகிற 29-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு 25 ஆம் தேதி முதல் 27ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் .ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன் பதிவாக ரூபாய் 5 ஆயிரமும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ 10,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாகனத்தை எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகையை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். வாகனத்தை ஏலம் முழுப் பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன் பணம் திருப்பித் தரப்படாது அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஏழுத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ். டி படி வரி தனியாக வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story