/* */

மதுரை ஆவினில் 6 வகை பால் பொருள்கள் உற்பத்தி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

மதுரை ஆவின் பால் பண்ணையில் பால் வரத்து குறைந்ததால், நெய் மற்றும் வெண்ணெய் உட்பட 6 வகையான பால் பொருள்கள் உற்பத்தி முடங்கியது.

HIGHLIGHTS

மதுரை ஆவினில் 6 வகை பால் பொருள்கள் உற்பத்தி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
X

மதுரையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் வரத்து குறைந்ததால், நெய் மற்றும் வெண்ணெய் உட்பட 6 வகையான பால் பொருள்கள் உற்பத்தி முடங்கியது.இதனால் ஆவின் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை: மதுரையில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் 39 ஏக்கர் பரப்பளவில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் தென்மாவட்டங்களுக்கு பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மதுரை ஆவினில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக பால் உள்பட 10 வகையான பொருள்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கோடைகாலம் என்பதால் பால் வரத்து குறைந்துள்ளது. இதனால் நெய், வெண்ணை, பால் பவுடர், பால்கோவா உள்ளிட்ட ஆறு வகையான பொருள்கள் தயாரிப்பு முடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆவினில் இருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 140 பாலகங்களுக்கு நெய் உட்பட 6 வகையான பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆவின் விற்பனை மையங்களில் நெய் மற்றும் ஆவின் பொருள்கள் கிடைக்காததால், ஆவின் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். விரைவில் ஆவின் பொருள்கள் உற்பத்தியை தொடங்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 April 2022 2:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  2. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  3. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  4. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  5. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  6. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  8. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  9. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  10. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்