மதுரையில் நடந்துசென்ற வயதான பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு: போலீஸார் விசாரணை

மதுரையில் நடந்துசென்ற வயதான  பெண்ணிடம்  5 பவுன் செயின் பறிப்பு: போலீஸார் விசாரணை
X

பைல் படம்

மதுரை கூடல்நகர் சாலையில் நடந்துசென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்

மதுரை கூடல்நகர் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கலியை பறித்துச்சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை கூடல் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மீனாட்சி. இவர் அதே பகுதியில் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மீனாட்சி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, கூடல்புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர். சாலை நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags

Next Story