ஊழியருக்கு கொரோனா தொற்று - வங்கி மூடல்

X
By - Needhirajan, Reporter |8 April 2021 3:15 PM IST
மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வங்கிக்கு 3 நாட்கள் மூடப்பட்டது.
மதுரை தெற்கு மாசி வீதியில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கி இன்று மற்றும் நாளை மூடப்பட்டு வங்கி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதோடு, குளோரின் பவுடர்கள் தூவப்பட்டுள்ளது.தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக வங்கி மூடப்பட்டது, வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொரோனா குறித்து பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu