தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வருகை.

தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை வருகை.
X
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று பிற்பகல் மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கான மூன்றாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இன்று (27.5.2021) மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 5 டேங்கர் லாரிகளில் 66.12 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதியம் 01.10 மணிக்கு மதுரை கூடல் நகர் வந்து சேர்ந்தது.

இதற்காக டேங்கர் லாரிகள் ரயில்வே பிளாட் வேகன்களில் இருந்து இறங்கும் வகையில் சாய்வுதளப் பாதை புதிதாக கூடல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு வந்த 24 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 1393.71 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture