/* */

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1000 காளைகள் பங்கேற்க அனுமதி

இன்று காலை 5 மணியில் இருந்து காளைகள் மற்றும் மாடு பிடி வீர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது.

HIGHLIGHTS

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1000 காளைகள் பங்கேற்க அனுமதி
X

ஜல்லிக்கட்டு போட்டி கோப்புப்படம் 

திமிலுடன் சீறிவரும் காளைகளுக்கு திமிருடன் அடக்க நினைக்கும் காளையர்களாலும், காளையர்களை தெறிக்கவிடும் காளைகளும் போட்டியிடும் ஜல்லிக்கட்டு போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்க இருக்கிறது. இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அமர்க்களப்படுத்தப் போகிறது.

அவனியாரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மொத்தம் 1,000 காளைகள், 800 மாடுபிடி வீரர்களுக்கு நேற்று டோக்கன் வழங்கப்பட்டன. டோக்கன் அனுமதி இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று காலை 5 மணியில் இருந்து காளைகள் மற்றும் மாடு பிடி வீர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், கேலரி அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளன. வாடிவாசலில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை தென்னை நார் பரப்பப்பட்டு உள்ளது.

அவனியாபுரத்தில் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை இரு புறங்களிலும் தென்னைமர கட்டைகளால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று பகலில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் காளைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வாடிவாசல் பின்புறமாக நீண்ட வரிசையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளால் அவனியாபுரம் களைகட்டி உள்ளது

Updated On: 19 Jan 2024 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு