யார் விலகி சென்றாலும் அதிமுகவிற்கு பாதிப்பு கிடையாது வெற்றி உறுதி ஓ.பி.எஸ். நம்பிக்கை

யார் விலகி சென்றாலும் அதிமுகவிற்கு பாதிப்பு  கிடையாது வெற்றி உறுதி ஓ.பி.எஸ். நம்பிக்கை
X
அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று துணை முதல்வர் .ஒ.பி.எஸ் மதுரையில் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கவும், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள தமிழக துணைமுதல்வர் ளி.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

கேள்வி : அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி

பதில் : ஏற்கனவே கூறியதுதான் பிரகாசமாக இருக்கிறது.

கேள்வி : தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் அதிமுகவில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன.?

பதில் : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

கேள்வி : தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்காததால் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் திமுக, அமமுகவுடன் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா.?

பதில் : எந்த வித பாதிப்பும் இல்லை, அதிமுக வெற்றி உறுதி என்று கூறி காரில் புறப்பட்டு சென்றார்.




Tags

Next Story